JEE மெயின்ஸ் 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!
இந்தியாவில் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கு சேர நடத்தப்படும் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (21.09.2021) கடைசி தேதியாகும்.
ஜேஇஇ மெயின்:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. நடப்பு ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது வந்தது.
உங்களது ஆதார் எண் மறந்து விட்டதா? கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஒரு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் இரண்டாம் கட்டமாக மார்ச் மாதத்திலும் தேர்வு நடைபெறும். அடுத்த கட்ட தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவலால் ஜேஇஇ தேர்வு கடந்த ஆண்டை போல வழக்கமாக நடைபெறவில்லை. தற்போது அரசின் முயற்சியால் தொற்று குறைந்துள்ளதால் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அக்டோபர் 3ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – PIB எச்சரிக்கை!
இந்த ஜேஇஇ தேர்விற்கு விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கியது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 2,800 மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 1,400 ஆகும். இன்றுடன் (21.09.2021) ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். செப்டம்பர் 25ம் தேதி முதல் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.