ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் விரைவில் நடக்கும் – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு:
இந்தியாவில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. அதே போல் மருத்துவ படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் என்னும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஜேஇஇ தேர்வானது 2021 முதல் ஆண்டிற்கு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மெயின் தேர்வு நடைபெறும், அதனை தொடர்ந்து அடுத்த தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழு பரிந்துரை!
அதே போல் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வும் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனால் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் எந்த தேர்வுகளும் நடைபெறவில்லை. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கூட அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசின் முக்கிய தேர்வுகளான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அரசு கலந்தாலோசித்து வருகிறது. ஏற்கனவே மே மாதம் நீட் தேர்வுக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஆகஸ்ட் மாதம் நடத்த ஆலோசித்து வருவதாவும் தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Really the performance of cental Government is detoriating due to irresponsibility in the administration.