ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி மனு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணையில் தமிழக அரசு ‘ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல’ என்று விளக்கம் அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்று. ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால் மிகவும் பிரபலமானது. இந்த ஜல்லிக்கட்டை காண ஏராள கணக்கான மக்கள் வாடிவாசல் வருவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
கடந்த 2017 ஆம் ஆண்டு மாடுகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இதனை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே போராடியது இளைஞர்கள் முதல் அனைவரும் மெரினாவில் இரவு பகலாக போராடினர். இந்த போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அனுமதி அளித்தது. 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு வழக்கம் போல நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சீனாவில் குறைந்து வரும் கொரோனா கட்டுப்பாடுகள் – Foxconn’s மூடலின் எதிரொலி!
Exams Daily Mobile App Download
இந்த விசாரணையில் இன்று தமிழக அரசு ஜல்லிக்கட்டு ஒன்று இல்லாமல் போயிருந்தால் நாட்டு மாடுகளே இருந்திருக்காது என்று கூறியது. மேலும் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. இது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த விளையாட்டில் பங்கு பெறும் காளைகளின் சந்தை மதிப்பு உயர்கிறது. தமிழகத்தில் தான் வளர்க்கும் காளைகளுக்கு யாரும் துன்பம் இழைக்க விரும்புவதில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.