அஸ்வினுக்கு அணியில் இடம் இல்லாததற்கு இதுவே காரணம் – ஜாஹிர் கான் வெளிப்படையான கருத்து!
இங்கிலாந்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்காததற்கான காரணத்தை முன்னாள் வீரர் ஜாஹிர் கான் தற்போது தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி:
இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. தற்போது 3வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்து மலைக்க வைத்தது. பின்னர் 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்க்ஸை துவக்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்து 139 ரன்கள் பின் தங்கியுள்ளது.
பவுலர்களை பந்தாடும் பொல்லார்ட் – மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம்!
முன்னதாக இங்கிலாந்து தொடருக்கான அணியில் அஸ்வின் இடம் பெறுவார் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு இருந்தும் அவருக்கான இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. முன்னாள் வீரர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் வீரர் ஜாஹிர் கான் வெளிப்படையான கருது ஒன்றினை தெரிவித்துள்ளார்.
Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்!
அவர், இந்திய அணியில் ஜடேஜா ஆல் ரவுண்டராகவும், சூழல் பந்துவீச்சிற்கும் தேர்வு செய்யப்படுவதால் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டு உள்ளார். அணித் தேர்வில் சரியான கலவை அமைய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியதோடு, இந்திய அணியில் வேகப்பந்து வீச்சுடன் ஆல் ரவுண்டர் இல்லாததற்கு வேதனை தெரிவித்தார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவின் வார்னே போல் இல்லாமல் இந்தியாவில் பல வீரர்கள் உள்ளார்கள் என கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.