தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கிட பரிசீலனை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அந்த தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் என வழங்கப்பட்டு வந்த குடும்ப நல நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு நிதியாக பணியாற்றிய நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு – தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
அத்துடன் தற்போது போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் அவர்களின் மனைவிக்கும் இனி வரும் காலங்களில் இலவச பயண அட்டை கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதே போல் நிரந்தர பணியாளர்களின் மனைவிக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்