மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தகவல் – நிலுவை தொகை குறித்த அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாக இருக்கிறது. அதன் படி ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவத் தொகை கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நிலுவை தொகை:
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் நிலுவைத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வருகிற ஆகஸ்ட் மாதம் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது ஊழியர்களுக்கு DA உயர்வு மட்டுமல்ல 18 மாத அரியர் பே (arrear pay) தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. AICP index அறிவிப்பின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறைந்தபட்சம் 4% உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மொத்த அகவிலைப்படி 38 சதவிகிதம் ஆக உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள்? வலுக்கும் கோரிக்கை
மேலும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத காலமாக நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை மொத்தம் ரூ.2 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மாற்றப்பட்டது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையானது வருகிற ஆகஸ்ட் மாதம் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.