ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமல் – ஐடி நிறுவனங்கள் அறிவிப்பு!
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகியவை தங்களது ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இவை ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
சம்பள உயர்வு:
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் துவங்கிய போது மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஊக்குவித்தது. ஊரடங்கு நிலை தளர்த்தபட்ட போதும் இந்த பணியானது தொடர்ந்து வருகிறது. ஆனால் மறுபக்கத்தில் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது.
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் – நீதிபதி குழு ஆலோசனை!!
ஆனால் 2020-2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஐடி முக்கியமான நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் கூறுகையில், கொரோனா காலத்தில் திறமையான பணியாளர்களை ஊக்குவிக்கப்பதற்காக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனவரி 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் இரண்டாம் கட்டமாக சம்பள உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவில் 19,230 பணியாளர்களையும், வெளிநாட்டு பிரிவுகளில் 1941 பணியாளர்களையும் புதிதாக நியமனம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தெர்ந்தெடுக்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே விப்ரோ நிறுவனமும் சம்பள உயர்வை அறிவித்திருந்தது. 80 சதவீத பணியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் கடந்த காலாண்டில் 7,700 பணியாளர்களை தேர்ந்தெடுத்தது. இந்த ஆண்டில் மேலும் 18,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.