தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் – நீதிபதி குழு ஆலோசனை!!
தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. தற்போது இந்த குழுவினர் தங்கள் இரண்டாம் கட்ட ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு மத்திய அரசு மருத்துவ நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தமிழகத்தில் நடத்துவதற்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்தது.
ஆகஸ்ட் மாதம் CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – வெளியான தகவல்!
இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து ஆணை பிறப்பித்தது. தற்போது இந்த குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் தங்களது புகார்களை வருகிற 23ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களது தலைமையிலான குழு சில தினங்களுக்கு முன்பு முதல் கட்ட ஆலோசனையை மேற்கொண்ட நிலையில் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆலோசனையின் முடிவில் பாதிப்புகளை கோப்புகளாக தயாரித்து தமிழக அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.