தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? வலுக்கும் கோரிக்கைகள் – அமைச்சர் சொன்ன விளக்கம்!

0
தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? வலுக்கும் கோரிக்கைகள் - அமைச்சர் சொன்ன விளக்கம்!
தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? வலுக்கும் கோரிக்கைகள் - அமைச்சர் சொன்ன விளக்கம்!
தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? வலுக்கும் கோரிக்கைகள் – அமைச்சர் சொன்ன விளக்கம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

மாணவர்கள் பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வழக்கம் போல சென்று வருகின்றனர். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஃப்ளு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என ஏகப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1000க்கு அதிகமானோர் ஃப்ளு காய்ச்சலுக்கும், 121 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காய்ச்சலால் அதிகம் குழந்தைகளும், பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், பருவநிலை மாற்றத்தின் போது இது போல காய்ச்சல் பரவல் இருப்பது பொதுவான ஒன்று தான் அதை நினைத்து பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் அதிகரித்து வருவதால் இன்று முதல் மாநிலத்தில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தசரா விடுமுறை கட்!

Exams Daily Mobile App Download

மேலும் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் குழந்தைகள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிகள் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு காலாண்டு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இல்லை என அமைச்சர் விளக்கம் கொடுத்தும், பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!