பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தசரா விடுமுறை கட்!
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தசரா பண்டிகைக்கான விடுமுறைகள் முன்னதாக 15 நாட்கள் அளிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு அதை மாற்றி உள்ளது.
தசரா விடுமுறை:
மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான ஆண்டு வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிட்டு அவற்றை அட்டவணையாக வெளியிடப்படும். இதன்படியே, அந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் செயல்படும். மேலும், அவசர கால விடுமுறைகள் மட்டுமே அப்போதைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்.
இந்நிலையில், 2022-23 கல்வி ஆண்டின் நாட்காட்டியின் படி தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 230 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது . ஆனால், கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 11 முதல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ஏழு நாட்கள் வரை கல்வி கற்பித்தலில் இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசு அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை தசரா விடுமுறை அறிவித்தது மற்றும் அக்டோபர் 10, 2022 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மொத்தம் 15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் “இந்த” பகுதிகளில் நாளை மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது உள்ள ஏழு வேலை நாட்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காக அந்த முடிவை மாற்றி உள்ளது. மேலும், முன்னதாக அறிவித்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை 14 நாட்களுக்குப் பதிலாக அக்டோபர் 1 முதல் 9 வரை விடுமுறையை அறிவித்துள்ளது. மற்ற வேலை நாட்களை 2023 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஈடு செய்து கொள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்