இனி ‘TATA IPL’ தான் – டைட்டில் ஸ்பான்சரை தட்டி தூக்கிய டாடா நிறுவனம்!
இந்திய நாட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் தேர்வாகி உள்ளது. ஏற்கனவே விவோ ஸ்பான்சர்ஷிப் இருந்த நிலையில் தற்போது அதை டாடா குழுமம் கைப்பற்றி இருக்கிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்:
நாடு முழுவதும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த ஆண்டு 15வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஐபிஎல் போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப் 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை டிஎல்எஃப் நிறுவனம் வாங்கியது. அதன்பின் பெப்சி நிறுவனம் 5 வருடங்களாக ஸ்பான்சராக வைத்திருந்தது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு முதல் 2022 வரை விவோ நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் வைத்திருந்தது.
ஜனவரி 17 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாகாண அரசு அறிவிப்பு!
மேலும் இரண்டு ஆண்டுகள் விவோ ஸ்பான்சர்ஷிப் எஞ்சியுள்ள நிலையில் டாடா குழுமம் கைப்பற்றி இருக்கிறது. அதன் படி 2022 மற்றும் 2023 இந்த இரண்டு ஆண்டுகளில் டாடா டைட்டில் ஸ்பான்சராக இருக்கும். அது மட்டுமில்லாமல் இனி ‘டாடா ஐபிஎல்’ என புரொமோஷன் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபில் 2022 சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது – அரசு அதிரடி அறிவிப்பு!
ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதன் படி ஐ.பி.எல் போட்டிகள் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.