ஜனவரி 17 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாகாண அரசு அறிவிப்பு!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 17ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரீமியர் டக் ஃபோர்டின் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
உலகளாவிய நாடுகளில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் தொற்று வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நோக்கி அரசு சென்றுள்ளது. அந்த வகையில் அமெரிக்க நகரங்கள் மற்றும் கனடாவின் சில முக்கிய மாகாணங்கள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை அதிகளவு பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் கனடா நாட்டின் முக்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சில வாரங்களுக்குள் எல்லை மீறும் என்று அறிக்கைகள் தகவல் அளித்திருந்தது.
TNPSC 193 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் உற்சாகம்!
குறிப்பாக கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒன்டாரியோவில் ஒமிக்ரான் மாறுபாடு வழக்குகளின் அதிகரிப்புக்கு மத்தியில், மாகாண அரசு அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு கடந்த வாரம் முடிவு செய்தது. குறிப்பாக, நோய்த்தொற்றுகள் காரணமாக ஊழியர்கள் பணிகளுக்கு வராததை ஒரு முக்கிய பிரச்சினையாக மேற்கோள் காட்டிய மாகாண அரசு ஒமிக்ரான் வைரஸ் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் செயல்பாடுகளை பாதிக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தது.
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது – அரசு அதிரடி அறிவிப்பு!
இதனால் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆன்லைன் கற்றலுக்கு மாற்றப்பட்டது. அதே போல உள்ள உட்புற உணவுகங்களையும் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜிம்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்டு, அவசரமற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும் இடைநிறுத்துமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மாகாணம் முழுவதும் மூடப்பட்ட பள்ளிகளை ஜனவரி 17 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரீமியர் டக் ஃபோர்டின் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.