IPL 2022: 5 முக்கிய அணிகளுக்கு கேப்டனாகும் வீரர்கள் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
IPL 2022: 5 முக்கிய அணிகளுக்கு கேப்டனாகும் வீரர்கள் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
IPL 2022: 5 முக்கிய அணிகளுக்கு கேப்டனாகும் வீரர்கள் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
IPL 2022: 5 முக்கிய அணிகளுக்கு கேப்டனாகும் வீரர்கள் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இதை தொடர்ந்து IPL மெகா ஏலம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது IPL அணிகளின் கேப்டன் தேர்வுகள் குறித்து மெகா ஏலத்திற்கு பின்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

தற்போது நடக்கப்போகும் IPL தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு சில அணிகள் இதற்கு முன் அவ்வணிக்கு கேப்டன் செய்த வீரர்களை தக்க வைக்கவில்லை. இதனால் மெகா ஏலத்தில் சிறந்த வீரரை எடுத்து கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியை முடித்துவிட்டு கேப்டனையும் தேர்வு செய்துள்ளது.

அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இந்த 2 அணிகளை தவிர்த்து மீதம் உள்ள 8 அணிகளில் 5 அணிகள் கேப்டனை தக்கவைத்து கொண்டது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் IPL அணிகளின் கேப்டன் தேர்வுகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடக்கும் மெகா ஏலத்திற்கு பின்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

முதலில் 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்க வைக்கவில்லை. இதனால் அவர் மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளார். இரண்டாவதாக கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டன் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் 5 அணிகளில் ஒரு அணிக்கு கேப்டனாக வாய்ப்புள்ளது. மோர்கன் தலைமையில் கொல்கத்தா அணி குவாலிபையர் வரை முன்னேறியது. மேலும் கடந்த IPL தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா வீரர்களாகிய வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரை கேப்டனாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!