இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்:
இந்தியாவில் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போது தாக்கல் செய்து வருகிறார். மேலும், தேர்தலுக்கு முன்பாக வரும் பட்ஜெட் தாக்கல் என்பதால் பெரிதளவில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். அதேபோல, இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்கள் புதிதாக ஆயிரம் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் எனவும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்