கேரளாவின் தமிழக, கர்நாடகா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!
கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தீவிர கண்காணிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது. தினசரி பாதிப்பு நாட்டில் 41,965 ஆக பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 60% அளவிற்கு பதிவாகி வருகிறது. கேரளா மாநில அரசு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் போதிலும், பாதிப்பு கட்டுக்குள் அடங்க மறுக்கிறது. மத்திய அரசு இதனால் கேரளா மாநிலத்திற்கு கூடுதல் உதவிகளையும் செய்து வருகிறது.
ZOOM நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி – பள்ளி, அலுவலக திறப்பு எதிரொலி!
மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள போதிலும், பண்டிகை காலமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருடேம்பேர் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தமிழகம் மற்றும் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் பேசியுள்ளார். கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைகளில் மாநில அரசு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தின் எல்லை பகுதிகளில் அரசு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், கூடுதல் கட்டுப்பாடுகளும் அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.