ஜூன் 28 வரை தீவிர முழு ஊரடங்கு அமல் – பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை!
கர்நாடக மாநிலத்தில் நேற்று (ஜூன் 25) இரவு 7 மணி முதல் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மாநிலத்தில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்ததால் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி நேற்று (ஜூன் 25) இரவு 7 மணி முதல் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூன் 28 காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை – அமைச்சர் விளக்கம்!
இந்த கால கட்டத்தில் உணவு, மளிகை, காய்கறி, பழங்கள் போன்ற கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீதியோர வியாபாரிகள், விநியோக தொழிலில் ஈடுபடுவோர், மதுபான கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. மக்களின் அவசர தேவைகள் நலன் கருதி 50% இருக்கைகளுடன் மாநிலத்திற்குள் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என்றும் ஹோம் டெலிவரி சேவைகள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை என்றும் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில், விமான நிலையங்களுக்கு தனியார் வாகனங்கள் மூலம் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.