தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைந்த கல்வி திட்டம் – முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழக அரசு மாற்றுத் திறனாளர்களை கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ என்ற திட்டத்துடன் இணைந்து புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இனி மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களை உடல் கல்வி, விளையாட்டு கல்வி ஆகியவற்றில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசின், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது தற்போது அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. சென்னையில் இன்று அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அமர் சேவா சங்கம் ஏழை எளிய மக்களின் நலனிற்காக தொடங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கடந்த 1981-ம் ஆண்டு ராம கிருஷ்ணன் – சங்கர் ராமன் ஆகியோரால் அமர் சேவா சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையில் சுய சார்புடன் இருப்பதற்கு தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்புக் கல்வி அளித்து வருகிறது. மேலும் கிட்டத்தட்ட 900 கிராமங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பட கிராமம் சார்ந்த மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சகத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!
இந்த நிழச்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டுக்கல்வி, உடல் கல்வி-ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முடியும் என்றார். மேலும் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடியாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அமர் சேவா சங்கம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தனது திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.