Covaxin தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – செப்டம்பர் இறுதிக்குள் ஒப்புதல்!
செப்டம்பர் மாத இறுதிக்குள் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
கோவாக்சின்:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அறிவித்தும், தடுப்பூசிகளை செலுத்தியும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் மக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறும், முகக்கவசங்களை முறையாக அணியுமாறும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய வைரஸ் கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக பரவி வருகிறது.
செப்.25 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
15 முதல் 18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி தயார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களின் பயணத்திற்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காததால், உலக சுகாதார அமைப்பு ஒத்துழைப்பு முக்கியமான ஒன்றாக உள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. இந்த ஆவணங்களின் சரிபார்ப்பு இறுதி கட்டத்தில் உள்ளதால், இம்மாத இறுதிக்குள் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.