செப்.25 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
குஜராத் மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் 10 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தொற்றானது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் மட்டும் தினசரி பாதிப்பு 4 இலக்கங்களில் பதிவாகி வருகிறது. அப்படி பதிவு செய்யப்பட்டு வரும் மாநிலங்களில் மட்டும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்திலும் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
15 முதல் 18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி தயார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்நிலையில், குஜராத்தின் எட்டு நகரங்களில் மட்டும் இவ்வகை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு உத்தரவானது செப்டம்பர் 15 ஆம் தேதி முடிவடையவிருந்தது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர், ஜூனாகத் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட எட்டு நகரங்களில் செப்டம்பர் 25 வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த அன்லிமிடெட் பிளான்கள்! முழு விபரம் இதோ!
அந்த வகையில் தினசரி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம், கிருஷ்ண ஜன்மாஷ்டமி மற்றும் விநாயகர் உற்சவத்தின்போது இந்த எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நேரத்தில் இருந்து மாநில அரசு தளர்வுகளை அறிவித்தது. குஜராத்தின் முதல்வராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி சமீபத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, புதிய முதல்வராக பதவியேற்ற பூபேந்திர பட்டேல் இக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.