WORK FROM HOME ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – Infosys நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் சமீபத்தில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
WORK FROM HOME:
கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது பணியை தொடருவதற்கான வாய்ப்பாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதை ஊக்கப்படுத்தியது. ஆனால் சமீப மாதங்களாக கொரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலை நாடு முழுவதும் திரும்பி வருவதால் தற்போது மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அழைக்கின்றனர்.
அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் WORK FROM HOME குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹைபிரிட் முறையில் (கலப்பின முறையில்) பணியாற்ற தொடங்கியுள்ளனர். அதாவது ஊழியர்கள் ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். மற்ற நாட்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனமும் தற்போது இந்த கலப்பின முறையை தான் பின்பற்றி வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி – மாநில அரசு முடிவு! அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் இது குறித்து செய்திகளுக்கு அறிவித்துள்ளார். மேலும், தங்களின் இந்திய அலுவலகங்களில், அலுவலகத்தில் சுமார் 45,000 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்