கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி – மாநில அரசு முடிவு! அமைச்சர் விளக்கம்!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் முதலில் இருந்தது மகாராஷ்டிரா மாநிலம் தான். கொரோனாவின் கோர பிடியில் சிக்கி அம்மாநிலத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு உதவி வருகிறது.
கல்வி கட்டணம்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். நாள் தோறும் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. குறிப்பாக இரண்டாம் அலை எதிர்பாராத அளவில் உயிர்களை காவு வாங்கியது. முதல் அலையின் போது கூட வயதானவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பலியாகி வந்தனர். ஆனால் 2ம் அலையில் சிறியவர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் ஏராளமான குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இழந்து ஆதரவின்றி மனதளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா அரசு பெற்றோரை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது. அதாவது பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவர்கள் நிதி காரணமாக கல்வியை இடை நிறுத்த கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – தீர்வு கிடைக்குமா?
Exams Daily Mobile App Download
மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்று உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் முழுமையான கட்டண விலக்கு விதியை கல்லூரிகளில் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசின் இந்த இலவசக் கல்வி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்