600 பேரை பணி நீக்கம் செய்த Infosys நிறுவனம் – காரணம் இதுவா? வெளியான தகவல்!!
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், இன்டெர்னல் தேர்வில் தேர்ச்சி பெறாத 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணிநீக்கம் அறிவிப்பு:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதற்கு முன்னதாக விப்ரோ நிறுவனம் கடந்த மாதம் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஃப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியதால் இந்த நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிறுவனம் பணியாளர்களின் திறமையை சோதிக்க இந்த தேர்வை நடத்தியது.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் – PwC நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அதில் தோல்வியடைந்த சுமார் 400 பேரை தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளது. இதற்கு முன் 208 புதியவர்கள் FA தேர்வில் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் படி மொத்தமாக 600 புதிய ஊழியர்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஊழியர்கள் ஆகஸ்ட் 2022 இல் போர்டில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஃப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தோல்வி அடைந்தாலும், ஜூலை 2022க்கு முன்பு சேர்ந்த புதியவர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை என பணி நீக்கம் செய்தவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.