அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் – PwC நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
உலகெங்கிலும் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் 50 சதவீத நிறுவனங்களாவது தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால் அமெரிக்கா நிறுவனமான PwC, அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 புதிய வேலைகளை அறிவித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்பு:
உலகளாவிய கணக்குத் தணிக்கை நிறுவனங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் PWC நிறுவனம், 156 நாடுகளில் சுமார் 45 பில்லியன் டாலர் வணிக மதிப்புடன், சுமார் மூன்று லட்சம் பணியாளர்களுடன், இதுவரை உலகளவில் மதிப்பிற்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் தணிக்கை, வரவு/செலவு கணக்கு நிர்வாகம், காப்புறுதி, திட்ட மதிப்பீடு, திட்ட வரைவு, எனப் பல முன்னணித் துறைகளிலும் சேவைகள் செய்து வருகிறது.
சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் – வெளியான ஷாக்கிங் தகவல்!
Follow our Twitter Page for More Latest News Updates
தற்போது உலகளவில் பல தொழில் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக ஏகப்பட்ட பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இதுவரை 50 சதவீத நிறுவனங்களாவது தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால் முன்னணி நிறுவனமான PwC தங்களது நிறுவனத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 30,000 வேலைவாய்ப்புகளை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏகப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.