IND vs WI: இந்திய அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
வெஸ்ட் இண்டிஸ் இந்தியா இடையிலான ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதில் 4 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி:
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை நழுவவிட்டதை தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6,9,11 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் பிப்ரவரி 16,18,20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு போலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியடைந்து தொடரை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் இந்திய தொடருக்கான இந்திய ஒரு நாள் மற்றும் T20 அணியை ஜனவரி 27 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் BCCI அறிவித்தது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி, அகமதாபாத் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில்தான், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், பேக்கப் வீரர் நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு இடைவேளை – பெற்றோர்கள் சரமாரி புகார்!
மேலும் பீல்டிங் கோச் திலிப் உட்பட 3 ஊழியர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 6 ஆம் தேதி தொடங்கும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுமா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது. கொரோனா உறுதி செய்த வீரர்களை தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களாகிய ஷிகர் தவன், ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் இவர்களுக்கு பதில் ஓப்பனிங்கில் களம் இறங்க புதிதாக மயங்க் அகர்வாலை அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.