இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படியிலான பணி – கால அவகாசம் நீட்டிக்க கடிதம்!!

0
இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படியிலான பணி - கால அவகாசம் நீட்டிக்க கடிதம்!!
இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படியிலான பணி - கால அவகாசம் நீட்டிக்க கடிதம்!!
இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படியிலான பணி – கால அவகாசம் நீட்டிக்க கடிதம்!!

இந்திய ரயில்வே துறையில் கருணை அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற கால அவகாசத்தை நீட்டிக்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வேத்துறை பணியிடங்கள்:

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பணிக்கலாத்தின் போது இறந்து போக நேரிட்டால் அவர்களின் பணி குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும். இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டு இதில் தளர்வுகள் ஏற்படுத்தி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அவர்கள் 5 ஆண்டுகளுக்குள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள் எட்டாம் வகுப்பு தேர்வாகி வேலைக்கு வந்ததால் தண்டவாள பராமரிப்பு வேலையில் ஈடுபடும் சாதாரண தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள் ஆகும். அவர்கள் கிராமப்புற பின்னணியை கொண்டவர்களாக உள்ளதால் அவர்களது பிள்ளைகளை படிக்கவைக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே இந்த அறிவிப்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் தற்போது அந்த தளர்வுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணை அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பணியில் உள்ளவர்களில் சிலர் மட்டுமே இன்னும் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அதிகப்படியானோர் தேர்ச்சி பெற்று சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே தற்போது ரயில்வே அமைச்சகம் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வாய்ப்பை மே மாதம் வரை வழங்கியுள்ளது.அதற்கு பின் வழங்காதவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னையில் மாபெரும் புத்தக கண்காட்சி 2021 – பிப்ரவரி 24 இல் தொடக்கம்!!

இந்நிலையில் இது குறித்து மதுரை மாவட்ட எம்.பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இன்னும் ரயில்வே துறையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். எனவே அவர்களுக்கு விதிவிலக்கு அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரு வேலை அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றால் அவர்களுக்கான கால அவகாசத்தை ஓராண்டு காலம் அவகாசம் அளித்திட வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!