உங்கள் முதலீடு பாதுகாப்பான வழியில் இரட்டிப்பாகனுமா? அஞ்சல் துறையின் சிறப்பு திட்டம்!

0
உங்கள் முதலீடு பாதுகாப்பான வழியில் இரட்டிப்பாகனுமா? அஞ்சல் துறையின் சிறப்பு திட்டம்!
உங்கள் முதலீடு பாதுகாப்பான வழியில் இரட்டிப்பாகனுமா? அஞ்சல் துறையின் சிறப்பு திட்டம்!
உங்கள் முதலீடு பாதுகாப்பான வழியில் இரட்டிப்பாகனுமா? அஞ்சல் துறையின் சிறப்பு திட்டம்!

தற்போதைய காலத்தில் பணத்தை எந்த அளவிற்கு சம்பாதிக்கிறோமோ அதை விட அதை எவ்வாறு பாதுகாப்பாக சேமிக்கிறோம் என்பது தான் முக்கியமான விஷயம். அந்த வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்யும் திட்டம் பற்றிய விவரங்களை இந்த பதிவில் கண்போம்.

பாதுகாப்பான முதலீடு:

வாழ்வின் பிற்பகுதிக்காகவும், நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தற்போதைய நமது வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் பலரும் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக முதிலீடு செய்வதற்கு அச்சம் கொள்கின்றனர். பாதுகாப்பாக முதலீடு செய்யும் வகையில் நாட்டின் அஞ்சல் துறை பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது, கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் ஆகும். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் முதன்முதலில் 1988ம் ஆண்டு இந்திய தபால்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

வீட்டிலிருந்தே மாதம் ரூ.60,000 வரை சம்பாரிக்கலாம் – ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பணமோசடி நிகழும் வாய்ப்பிருப்பதாக கடந்த 2011ம் ஆண்டில் இந்த திட்டம் இடை நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் முதிர்வு காலமான 124 மாதங்களில் நமது முதலீடு இரட்டிப்பாக கிடைக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 50 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கு பான் அட்டை தேவை. அதேபோல், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கு வருமான வரி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மீறினால் நடவடிக்கை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

இந்த திட்டத்திற்கு 6.9% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் திட்டத்தில் உள்ள கணக்கு ஒருவரின் பெயரில் இருந்து மற்றொருவரின் பெயரில் மாற்றுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. கணக்கு தொடங்கப்பட்டவர் மரணித்தால் அவர் நியமிக்கப்பட்ட அல்லது சட்டப்படியான வாரிசின் பெயருக்கு திட்டம் மாற்றப்படும். கணக்கு தொடங்கி ஆறு மாதத்திற்கு பிறகு தேவைப்பட்டால் அந்த தொகையை நீங்கள் பெறலாம். அது வரையான காலத்திற்கு வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு உங்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!