இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு குடியுரிமை – மத்திய அரசு பதில்!
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உணர்ச்சிப் பூர்வமாக முடிவெடுக்க முடியாது, சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மத்திய அரசு:
இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் இலங்கை அகதிகளாக மண்டபம் அகதிகள் முகாமிலும், திருச்சி அகதிகள் முகாமிலும் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தமிழர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டும் அகதிகள் என குறிப்பிட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்கள் தமிழகத்தில் எந்தவித சொத்துக்களும் வாங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர் தங்களை இலங்கை அகதிகள் என குறிப்பிடாமல் தயாகம் திரும்பியவர்கள் என குறிப்பிட்டு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2009 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர்
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பணியில் தீவிரம் காட்டும் அரசு!
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் மத்திய அரசிற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த விண்ணப்பங்கள் குறித்து மத்திய அரசு 16 வாரத்தில் உத்தரவிட வேண்டும் என 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பின்னர் அந்த உத்தரவை நிறைவேற்றாததால் வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷவர்தன் ஷெர்ங்ளா, உள்துறை செயலர் அஜய் பல்லா, திருச்சி ஆட்சியர் சிவராசு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்பிரமணியம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன், கடந்த முறை விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு அளித்த விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். தவறினால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்படும் என உத்தரவிட்டார். இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது, சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளது. இந்திய சட்டத்தின் படி இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.