இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்.. இன்று (ஜூலை 1) முதல் தொடக்கம்!
இந்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்கள் தேர்வு செய்ய 16 மாவட்ட இளைஞர்களுக்கான முகாம் இன்று (ஜூலை 1) துவங்கியது.
ஆட்சேர்ப்பு முகாம்
இந்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டத்தில், இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த திட்டத்தின் படி 17 ஆண்டு 6 மாத வயது நிரம்பிய இளைஞர்கள் பயிற்சி பெற்று இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றலாம். மேலும் அவர்களை அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தில் ஆட்களை சேர்க்க முகாம் பெரம்பலூரில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த முகாமில் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் முதற்கட்ட தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 3200 பேருக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 800 பேர் வரவழைக்கப்பட்டு 4 நாட்கள் உடற்தகுதி தேர்வும், 5வது நாள் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது.
பொதுமக்கள் கவனத்திற்கு.. ஜூலையில் கவனம் செலுத்த வேண்டிய 5 நிதி விஷயங்கள்!
மேலும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வுகள் இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமை திருச்சி மண்டல ராணுவ ஆள் சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.