IND vs ENG 3வது போட்டி – இந்திய அணியில் மாற்றம்? விராட் கோஹ்லி விளக்கம்!
இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அணியில் மாற்றங்கள் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்தது. இது குறித்து அணியின் கேப்டன் பதில் அளித்துள்ளார்.
3வது டெஸ்ட் மேட்ச் :
இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் போட்டி டிரா ஆனது தொடர்ந்து 2வது போட்டியானது லார்ட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா – ஷமி ஆகியோரின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக இருந்ததால் 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தெய்வமகள் சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – கர்ப்பமாக இருக்கும் நடிகை!
இதனை தொடர்ந்து அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வந்தது. இரண்டாவது டெஸ்டில் 5 விக்கெட்டுகளுடன் இஷாந்த் சர்மா தனது ஆட்டத்தை சிறப்பாக ஆடினார். இருப்பினும் முதல் டெஸ்ட்க்கு பிறகு காயமடைந்த ஷர்துல் தாக்கூர் மூன்றாவது டெஸ்டில் விளையாடத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விளையாடுவதற்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருப்பதால் அணியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து அணியின் கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,காயம் எதுவும் இருந்தால் தவிர, அணியில் மாற்றம் செய்ய எந்தக் காரணமும் எங்களிடம் இல்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டோம். 2வது டெஸ்டுக்குப் பிறகு களத்தில் இறங்க அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள். அணியில் 12 பேரை தேர்வு செய்து ஆடுகளத்தின் தன்மை, வானிலை ஆகியவற்றை முன்வைத்து 11 வீரர்களை தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.