தெய்வமகள் சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – கர்ப்பமாக இருக்கும் நடிகை!
தமிழகத்தில் ஒளிபரப்பாகி பட்டையை கிளப்பிய தெய்வமகள் சீரியல் நடிகை தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தெய்வமகள் நடிகை:
கடந்த 2013ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய தெய்வமகள் தொடர் ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதிக ரசிகர்களை பெற்றது. இந்த தொடரில் அறிமுகமான வாணி போஜன் தொடரின் கதாநாயகியாக நடித்தார். மேலும், கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா மற்றும் பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இந்த தொடர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகியது. தற்போது, ஜெமினி சூர்யா தொலைக்காட்சியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.
மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் – மாதிரி வரைபடம் வெளியீடு!
இந்த தொடரின் நாயகியின் அளவிற்கு பிரபலமானவர் சீரியலின் வில்லி காயத்திரி கதாபாத்திரம். இவர் இதற்கு முன்னதாக பல வேடங்களில் நடித்திருந்தாலும், தெய்வமகள் வில்லி கதாபாத்திரம் தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. இந்த தொடரில் உள்ள கதாபாத்திர பெயராலேயே இன்றைக்கும் அந்த தொடரின் நடிகர்கள் அழைக்கப்படுகின்றனர். காயத்ரியின் உண்மையான பெயர் ரேகா குமார் ஆகும். இவர் சமீபத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார். இதற்கு அதிக லைக்குகள் வருகின்றது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், இந்த தொடரில் வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக நடித்தவர், உஷா ஷாய். இவர் அப்போது மிகவும் சிறிய வயது பெண்ணாக பள்ளியில் படிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், தான் தாய்மை அடைந்திருப்பதாக கூறியுள்ளார். அவருடைய இந்த மகிழ்சியான செய்திக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்தைகளை மனதார தெரிவித்து வருகின்றனர்.