இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஜன.13ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
இந்தியாவில் தீவிரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஜனவரி 13ம் தேதியன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா வைரஸின் 3ம் அலை தொற்று பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த நோய்த்தொற்றானது ஒவ்வொரு நாளும் இரட்டிப்பு மடங்காக அதிகரித்து மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் தோறும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜன.14ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வழக்குகள் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த நோய் தொற்றின் சூழ்நிலை குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். இதற்கான கூட்டம் வரும் வியாழக்கிழமை அதாவது ஜனவரி 13ம் தேதியன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா நோய் பரவியதில் இருந்து அனைத்து மாநில மற்ற யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பல கட்டமாக சந்திப்புகளை நடத்தினார்.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் முதல் கூட்டத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இப்போது அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், ஊரடங்கு விதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது.
தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.35,000 ஊதியத்தில் அரசு வேலை – ஜன.20 கடைசி நாள்!
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 9ம் தேதியன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் கொரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்த பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், இளம் பருவத்தினருக்கு மிஷன் முறையில் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (ஜன.10) ஒரு நாளில் 1,68,063 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளது.