தமிழகத்தில் ஜன.14ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. ஜனவரி 10ம் தேதி வரை இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து பிறப்பித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை உள்ள இரவு நேர ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அத்துடன் உணவகங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக அதிகரிப்பு – அடிப்படை சம்பளம் 23% உயர்வு! ஜாக்பாட் அறிவிப்பு!
மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து திரும்ப சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படாது. அதனால் இதற்கு முன் உள்ள நாட்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பயணிகளுக்கு உதவிபுரியும் வகையில் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பொங்கல் பண்டிகை நாளான ஜனவரி 14ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவர்கள் அன்று காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.