இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 31,923 பேருக்கு தொற்று! 282 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பேருக்கு 31,923 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 282 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,63,421 ஆக உயர்ந்ததுள்ளது. நோய் தடுப்பு பணியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 83,39,90,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இனி டாஸ்மாக் கடைகளில் ‘இது’ கட்டாயம் – மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை!
நேற்று மட்டும் புதிதாக 282 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்ததுள்ளது. இந்த நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் மூன்றாம் அலை தொடங்கி விட்டது என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் இல்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும் நாட்டில் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 31,990 குணமடைந்து மீண்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,640 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.