நாடு முழுவதும் ஒரே நாளில் 41,806 பேருக்கு கொரோனா பாதிப்பு – 581 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 39 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் பல மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
தமிழக ரயில் நிலையங்களில் கொரோனா ‘ஸ்கேனர் கருவி’ – நிர்வாகம் நடவடிக்கை!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,130. இதனால் மொத்தமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 01 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,11,989 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 97.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் இறந்தவர்கள் விகிதம் 1.33 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 34,97,058 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.