இந்தியாவில் ஒரே நாளில் 415 பேர் உயிரிழப்பு – 29,689 பேருக்கு கொரோனா உறுதி!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 415 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 29,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் மற்ற நாடுகளை விட கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகள் இயக்கம் – ஊழியர்கள் அதிருப்தி!
இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 29,689 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 42,363 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3,06,21,469 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 415 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது.
ரூ.25,000/- ஊதியத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை !
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் 3,98,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூலை 26ம் தேதி நிலவரப்படி 44,19,12,395 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.