இந்தியாவில் ஒரே நாளில் 723 பேர் பலி – 39,796 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் 723 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 39,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் சுமார் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக காணப்பட்டு வருவதால் மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த முழு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு – ஜூலை 17க்குள் முடிக்க உத்தரவு!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,05,85,229 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி 723 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,02,728 ஐ எட்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் நேற்று ஒரே நாளில் நாட்டில் தொற்றில் இருந்து 42,352 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் தற்போது வரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,90,00,430 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி 4,82,071 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.