நாடு முழுவதும் 15 நாட்கள் முழு ஊரடங்கு – 1 லட்சம் இறப்புகள் தடுக்கப்படும்!
உலகளவில் எந்த நாட்டை விட இந்தியாவில் கடந்த 10 நாளாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரேசில் அதிக இறப்பு நிகழ்ந்த நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நிலைமையை சரி செய்ய பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பரவல் அதிகமுள்ள ஒரு சில மாநிலங்களில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 5 நாட்களாக கொரோனாவால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3500 க்கு அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து WHO கூறுகையில், “உலகளவில் கொரோனா பரவல் அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் 3000க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைகளில் மே மாத நேரடி தேர்வுகள் நடத்தக் கூடாது – யுஜிசி அறிவுறுத்தல்!!
இதனால் உலகளவில் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்படும் நாடாக இந்தியா உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் அதிக உயிரிழப்புகள் உள்ள நாடாக இருந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா உள்ளது. தற்போது நாடு தழுவிய முழு ஊரடங்கை 15 நாட்களுக்கு அமல்படுத்துவது மூலமாக மட்டுமே 1 லட்சம் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். இதே நிலைமை தொடர்ந்தால் கொரோனா பாதிப்பில் இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிடும்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதுக்கு ஆசிரியர் களுக்கு இவ்வளவு சம்பளம் ஒரு சிலருக்கு சரி எதற்கு ஒன்றும் புரியல தண்டசம்பளம்