ஒரே நாளில் 3.60 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகாதாரத்துறை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நேற்று ஒருநாள் மட்டும் 3.60 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் கைமீறி உள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்களை எரிக்க முடியாத நிலை உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், சிகிச்சை பெறுவோர் மற்றும் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
மே 3 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
- புதிதாக நேற்று 3,60,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்தது.
- நேற்று புதிதாக 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இதன் மூலமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது.
- நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.
- இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 29,78,709 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
இதன் காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 82.33%, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.12% ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16.55% சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 14,78,27,367 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.