மே 3 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது அது மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிகமாக கொரோனா பரவல் உள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பகல் நேரங்களில் சில கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது. அதன் படி மளிகை, காய்கறி கடை, உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் இயங்கலாம். பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை. உணவகங்களில் பார்சல் உணவு மற்றும் வீட்டுக்கு சென்று உணவு விநியோகிப்பது, ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் அறைக்கு சென்று மட்டும் உணவு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மே 2 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக, மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good Tamil communication