நாடு முழுவதும் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
நாடு முழுவதும் உள்ள 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இன்று முதல் கோவின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் பலர் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் அரசு மே 1 ஆம் தேதிக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த அறிவிப்பு காரணமாக தடுப்பூசி மையங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதனால் நோய் பரவல் அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கும். இதற்காக முன்பதிவு செய்ய www.CoWin.gov.in/home என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 11 வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!
இதில் விண்ணப்பிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று தேவைப்படும். மேலும் தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் தங்களது செல்போன் எண் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒரு எண் மூலமாக குறைந்தது 5 பேர் வரை பதிவு செய்யலாம். ஆனால் அனைவருக்கும் தனித்தனி அடையாள அட்டை தேவைப்படும். மேலும் தடுப்பூசி போட மையங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.