இந்தியாவில் உள்ள வங்கிகள் மார்ச் 8 ஆம் தேதி அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை
இந்தியாவில் உள்ள வங்கிகள் பொதுவாக பொது விடுமுறை நாட்களில் மூடப்படும். சில மாநிலங்களில் குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். அது தவிர குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற நாட்களிலும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அந்த வகையில் வருகிற மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
SSC CPO SI வேலைவாய்ப்பு 2024 – 4187 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
அதே போல மார்ச் 25 ஆம் தேதி ஹோலி மற்றும் மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. மார்ச் 22 அன்று பீகார் திவாஸ் மற்றும் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யோசங்கின் இரண்டாவது நாள்/ஹோலி உள்ளிட்ட பண்டிகை காரணமாக குறிப்பிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, மேலும் இரண்டாவது சனிக்கிழமை (மார்ச் 9), நான்காவது சனிக்கிழமை (மார்ச் 23) மற்றும் மார்ச் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட இருக்கிறது.