தமிழகத்தில் சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்கள் 23ம் தேதி முதல் வேலை நிறுத்தம் – வலுக்கும் கோரிக்கை!!
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தற்போது மின் கட்டண உயர்வால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்படுவதால் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மின் கட்டண உயர்வு:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டண உயர்வானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மின் கட்டண உயர்வு ரூ.55 முதல் ரூ.1,130 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் குடிசை, விவசாயம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் மின்சாரம் வழக்கம் போல இலவசமாக அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் சிறு, குறு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மருத்துவ துணி எனப்படும் பேன்டேஜ் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசின் அதிகபட்ச மின்கட்டண உயர்வு காரணமாக விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால் கூலி உயர்வு கேட்டு சத்திரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்திருந்தது.
தமிழக அரசு மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த கோரிக்கையில், 16 ஊடை கொண்ட 1 மீட்டர் துணிக்கு 166.5 பைசா கூலி தற்போது வழங்கப்படுகிறது. இதனை 10 பைசா உயர்த்தி 176.5 பைசா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கூலி உயர்வு வழங்கா விட்டால் வருகிற 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் அரசு இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.