IND vs SA : 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி! இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்!

0
IND vs SA : 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி! இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்!
IND vs SA : 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி! இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்!
IND vs SA : 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி! இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்!

தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா மோதும் முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி:

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து நேற்று முதல் ஒரு நாள் போட்டி நேற்று தென்னாப்பிரிக்காவில் உள்ள போலந்து மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். தென்னாபிரிக்காவின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினர்.

தென்னாபிரிக்க அணி தொடக்கத்திலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் வீசிய 5 வது ஓவரில் மாலன் ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்பு களம் இறங்கிய தென்னாபிரிக்கா கேப்டன் பாவுமா தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அஸ்வின் பந்தில் டி கோக் போல்டு ஆகா பின்பு வந்த வான் டெர் டுசென் பாவுமாவுடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து. இதில் கேப்டன் பாவுமா மற்றும் வான் டெர் டுசென் இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இந்திய அணி களம் இறங்கியது தொடக்கத்திலேயே தவான் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

ஜனவரி 21 முதல் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு..! மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

இந்தியா 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க்ரம் பந்தில் கேப்டன் KL ராகுல் அவுட் ஆனார். பின்பு தவானுடன் ஜோடி சேர்ந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடினார். இருவரும் அரைசதம் அடித்தனர். பின்பு இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி மற்றும் மகாராஜ் ஆகியோர் பந்தில் இருவரும் அவுட் ஆகா அடுத்து களம் இறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத நிலையில் தாகூர் மட்டும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்க அணி முன்னிலை பெற்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!