மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு – அமைச்சர் சொன்ன விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ஓய்வூதியம் அதிகரிப்பு
மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்று இறந்துவிட்ட பின் அவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்து இருக்கிறார்.
தமிழக வங்கிகளுக்கு 2 தொடர் விடுமுறைகள் – உண்மை நிலவரம் இது தான்!!
அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9000 வழங்கப்படுகிறது. அதனை உயர்த்த அரசு திட்டமிடவில்லை. மேலும் தற்போது 44,81,245 ஓய்வூதியர்கள் இருக்கின்றனர். இதில் 20,93,462 பேர் குடும்ப ஓய்வூதியதர்கள், அவர்களுக்கு 2022-23 ஆம் நிதியாண்டில் 2,41,777 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.