தமிழகத்தில் பால் கொள்முதல் நிலையங்கள் அதிகரிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
பால் கொள்முதல்:
தமிழகத்தில் பால் கொள்முதல் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் பால் உற்பத்தியை பெருக்குவது, உற்பத்தியாளருடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்வரிடம் பரிசீலனை செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறையில் பணி புரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வக்பு வாரியத்தில் ஒப்பந்த பணி!
மேலும் மக்களுக்கு தரமான பால் மலிவான விலையில் வழங்க திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் 70 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இல்லை, இருந்தாலும் மற்ற செலவுகளை குறைத்து மூலதன செலவுகளை உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.