தமிழகத்தில் SC, ST மேம்பாட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் SC, ST மேம்பாட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் SC, ST மேம்பாட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் SC, ST மேம்பாட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார வளர்ச்சிக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி இருக்கிறது.

ஆண்டு வருமானம் உயர்வு:

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடையும் வகையில், இந்த உச்சவரம்பு ரூ.3லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் என ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து தாட்கோ மேலாண் இயக்குநர் அரசுக்கு அளித்த பரிந்துரையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர் இனத்தவர் 18 சதவீதத்தில் இருந்து 21.10 சதவீதமாகவும், பழங்குடியினர் 8 லட்சம் என்ற அளவில் 1.01 சதவீதமாகவும் இருப்பதால், அவர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து சமுதாய சமநிலை ஏற்பட உதவும் வகையில், தாட்கோவின் அனைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆண்டு வருமான உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழக முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டத்திலிருந்து விலக்கு? இயக்குநர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இப்படி உயர்த்துவது மத்திய அரசின் திட்டத்தில் உள்ள ஆண்டு உச்சவரம்புக்கு இணையாக இருக்கும் எனவும் இதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் அரசுக்கு நிதிச்சமை ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும், ஆண்டு வருமானத்தை உயர்த்தி ஆணை வெளியிட வேண்டும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து இந்த கருத்துரு அரசால் பரிசீலிக்கப்பட்டு, தாட்கோ மேலாண்மை இயக்குநரின் பரிந்துரைப்படி, தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!