இந்தியாவில் காய்ச்சல் பாதிப்பு மார்ச் மாத இறுதியில் குறைய வாய்ப்பு – மத்திய அரசு கணிப்பு!
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 துணை வகை வைரஸ் பரவி வரும் நிலையில் மார்ச் இறுதிக்குள் இதன் வேகம் குறையும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் குறைவு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இறப்பு விகிதம் குறித்தும் மத்திய சுகாதார அமைச்சகம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதன் படி பருவகால காய்ச்சலால் இளம் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் H3N2 காய்ச்சலால் இருவர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது,
தமிழகத்தில் ரமலானை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு ‘இதனை’ வழங்க உத்தரவு – முதலமைச்சர் அதிரடி!
கடந்த சில மாதங்களாக நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுகின்றன. இந்த காய்ச்சல் “ஹாங்காங் காய்ச்சல்” என அழைக்கப்படுகின்றன. மேலும் எச்1என்1 பாதித்த நோய்யாளிகளை கண்காணிக்கும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் இந்த பாதிப்பு மார்ச் இறுதிக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download