அதிரடியாக வெளியான உத்தரவு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு – ஊக்கத்தொகை அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசுத்தொகை மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாட்டி வதைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிப்பு – உத்தரவை வெளியிட்ட பீகார்!
Follow our Instagram for more Latest Updates
அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் இந்து சமய அறநிலையை துறையின் கீழ் பணியாற்றும் கோவில் ஊழியர்களுக்கு ரூ. 3000 கருணைக்கொடை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து துறையின் கீழ் பணியாற்றும் 1,17,129 ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ. 7.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.