தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக பல தீவிர கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வந்தது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் நோய் தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அரசின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் RTE திட்டத்திற்கான ஆர்வம் குறைந்தது – அரசு பரபரப்பு தகவல்!
அதன்படி, தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று மட்டும் 2,068 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 20,385 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இன்று கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 7 பேர் இணை நோய்கள் ஏதும் இல்லாதவர்கள், மேலும் 50 வயதுக்குட்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதிர்ச்சியளிக்கும் விதமாக 12 வயதிற்குட்பட்ட 109 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் மேலும் 189 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.