தமிழகத்தில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தும் – தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
தமிழகத்தில் இனி வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வெயில்:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர தொடங்கியது. தற்போது கோடை மழை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் மீண்டும் வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR மெட்ராஸ் ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
இந்த வாரம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தும் என்றும், மற்ற மாவட்டங்களில் வெயில் குறைந்து காணப்படும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் வெயில் குறித்த பயம் மக்களிடம் மீண்டும் தோன்றியுள்ளது.